மாஸ்டர் திரைப்படம் பற்றி வண்டை வடையாக பொய் சொன்ன லோகேஷ் கனகராஜ்.! செம காண்டில் விஜய் ரசிகர்கள்

விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில்  நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் விஜய் இதுவரை எந்த திரைப்படத்திலும் இல்லாத அளவிற்கு நடித்துள்ளதாகவும் முற்றிலும் வேறுபட்ட கதையை இந்த திரைப்படம் கொண்டுள்ளதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து வாத்தி கம்மிங் என்கின்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதைத்தொடர்ந்து  இந்த திரைப்படத்திலிருந்து இரண்டாவது ப்ரமோவில் விஜய் முடிஞ்சா தொட்டு பாருடா என்கின்ற டயலாக் பேசி இருந்தார்  அந்த டயலாக் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது.

இந்தத் திரைப்படத்தில் விஜய் கன்னத்தில் கைவைத்து நெட்டி எடுப்பது போன்ற  காட்சி ஆனது கத்தி, துப்பாக்கி போன்ற திரைப்படத்தில் இருப்பது போல அப்படியே தொடர்ந்து வந்துள்ளது.

எனவே இதை பார்த்த  ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் பொய் சொல்லிவிட்டார் இது போல இன்னும் எத்தனை காட்சிகள் உள்ளதோ என வருத்தத்தில் உள்ளனர். இதைப் பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வாக்குவாதம் ஆகவே போய்க் கொண்டுள்ளது.

Leave a Comment