லியோ படத்தில் வெறும் பெயரை வைத்து ஏமாற்றபோகும் லோகேஷ்.! வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்…

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ்  கனகராஜ். முதல் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மூன்று ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம், ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்ட நிலையில் காஷ்மீரில் அதிக குளிர் இருப்பதால் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் எல்சியு-வில் தான் இணைகிறது என்று ரசிகர்கள் பலரும் பலவிதமாக கூறி வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் அதற்கு ஏற்றார் போல இந்த படத்தின் டைட்டில் ப்ரமோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது மட்டுமல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனராஜ் அவர்கள் தான் இயக்கம் ஒவ்வொரு திரைப்படமும் எல்சியு-வில் இணைவது போல சில காட்சிகள் இடம் பெற்று இருக்கும் ஆனால் லியோ படத்தில் அப்படி கிடையாது என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக வேற ஒரு யுத்தியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது லியோ திரைப்படத்தில் எந்த ஒரு நடிகரையும் அந்த படத்தில் இணைக்க போவதில்லை அதற்கு பதிலாக அவர்களுடைய பெயர் மட்டும் இடம்பெறும் வகையில் உருவாகப் போகிறதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணமாக கைதி படத்தில் நடித்த டில்லி, விக்ரம் படத்தில் நடித்த அமர், ஏஜென்டினா, சந்தானம், விக்ரம், ரோலக்ஸ், இவர்களுடைய பெயர்கள் மட்டும் தான் லியோ படத்தில் இடம்பெறும் என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் மூலம் லோகேஷ் மற்றும் விஜய் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்து இருந்த நிலையில் இந்த தகவல் வெளியானதும் தளபதி ரசிகர்களை கையில் கூட பிஒடிக்க முடியவில்லை. அதாவது இதுவரைக்கும் எல்சியு-வில் லியோ இணைகிறது என்று கூறிவந்த நிலையில் இந்த தகவல் வெளியானதும் அது உறுதியாகிவிட்டது..

Leave a Comment