லியோ படத்தின் அப்டேட்டை சொன்ன லோகேஷ்.! உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் வெறும் நான்கு படங்களை மட்டுமே இயக்கிய தற்போது தயாரிப்பாளர்களால் தேடப்பட்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதை.

இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கண்ணராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தின் மூலம் இந்த கூட்டணி மறுபடியும் இணைந்து இருக்கிறது இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஸ் கனகராஜ் அவர்கள் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது அவரிடம் லியோ குறித்து சில அப்டேட்டுகள் கேட்கப்பட்டிருக்கிறது ஆனால் இன்னும் ஆறு மாதம் தான் இருக்கிறது இந்த ஆறு மாதத்திற்கு தேவையான அப்டேட்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுவோம் என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் லியோ திரைப்படம் LCU வில் இணைகிறதா என்பது ரசிகர்களின் கேள்விக்குறியாக இருந்தது.

அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த திரைப்படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கூறியிருக்கிறார். தற்போது 60 நாள் ஷூட்டிங் முடிந்து விட்டது இன்னும் 60 நாள் இருப்பதாக கூறி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் அவர்களே கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்திற்கும் இது போல தான் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது அதே போல தற்போது லியோ திரைப்படத்திலும் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சி இருக்கிறது என்று கூறியதும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Leave a Comment