ஒரு நட்சத்திரத்தின் மகளாக வாழ்வது “ரொம்பவும் கஷ்டம்” – மனம் திறந்து பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுதும் நம்பர் ஒன் ஹீரோவாக இருந்து வருகிறார் காரணம் வருடத்திற்கு ஒரு வெற்றி படத்தை கொடுப்பதால் அந்த இடத்தை அவர் தக்க வைத்துக் கொள்கிறார் இப்பொழுது கூட தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு இயக்குனர் நெல்சன் நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் அந்த வகையில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், இளம் நடிகை  பிரியங்கா அருள் மோகன் மற்றும் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

ரஜினி ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டிருக்க மறுப்பாக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதுவரை இயக்குனராக பல்வேறு படங்களை கொடுத்துள்ளார் அந்த படங்கள் வெற்றி படங்களாக மாறி உள்ளது.

தற்பொழுது கூட ஒரு படம் பண்ண போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு ஈவன்டில் கலந்து கொண்டார் அப்பொழுது ஒரு நட்சத்திரத்தின் குழந்தையாக இருப்பதன் அழுத்தம் குறித்து பேசி உள்ளார் வெளியில் இருப்பவர்களை விட நட்சத்திர குழந்தைகள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியது..

இருக்கும் ஏனெனில் மக்கள் எப்பொழுதும் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் மேலும் திரைப்படம் தொழிலில் நுழைந்த உடன் அவர்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறி முடித்தார்.

Leave a Comment

Exit mobile version