ரஜினி, அஜித்தை போலவே கொரோனா நிதிக்கு பணத்தை அள்ளிகொடுத்த நடிகர் நெப்போலியன்.! வைரல் நியூஸ்.

சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பின் ஹீரோ வில்லன் போன்றவற்றில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி 90 காலகட்டங்களில் சிறப்பாக வந்தவர் நடிகர் நெப்போலியன். இவரை திரை உலகிற்கு அழைத்து வந்தவர் இயக்குனர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் அடி எடுத்து வைக்கும் போது நெப்போலியன் என முதலில் பெயரை மாற்றி தான் நடிக்க வந்தார் ஆனால் அந்த பெயர் நெப்போலியனுக்கு முதலில் பிடிக்கவில்லை ஆனால் காலப்போக்கில் படங்களில் இவரது பெயர் மிகப்பெரிய அளவில் பரப்ப பட்டது அது அவருக்கு வெற்றியை பெற்று தர ஒரு கட்டத்தில் இது தான் தனக்கு பொருத்தமான பெயர் என்று அவர் உணர்ந்து கொண்டார்.

பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து தன்னை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தி கொண்டு சிறப்பாக வந்த இவர் ஒரு பக்கம் அரசியலிலும் குதித்து வெற்றி கண்டார் இப்படி சினிமா, அரசியல் போன்றவற்றில் சிறப்பாக வலம் வந்த இவருக்கு அவரது மூத்த மகன் சில நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்ததால் தற்போது அதை கவனிக்க இந்தியாவிலிருந்து புறப்பட்டு தற்போது அமெரிக்காவில் தங்கி தனது மகனை பார்த்து வருவதோடு அங்கு ஒரு தொழிலையும் நடத்தி வருகிறார்.

அந்த ஐடி கம்பெனியில் சுமார் 800 பேர் இவருக்கு கீழ் வேலை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க தன்னை நம்பி வருகின்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் பின்னிப் பெடல் எடுக்கிறார்.சமீபகாலமாக கொரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்து உள்ளது இதற்காக தமிழக மக்கள் பலரும் முதலமைச்சரை சந்தித்து தனது காசோலைகளை கொரோனா நிதிக்கு கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் நெப்போலியன் சார்பில் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எவ்வளவு நிதி கொடுத்தார் என்ற அறிவிப்பு தற்போது வரையிலும் தெரியவில்லை. இச்செய்தி தற்பொழுது காட்டுத்தீ போல பரவி வருகிறது

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment