நடிகர் விக்ரம் போலவே கோடிகளில் சம்பளம் வாங்கும் அவரது மனைவி ஷைலஜா.? அப்படி என்ன வேலை செய்கிறார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்காக உடலை வருத்திக்கொண்டு நடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன.

ஆனால் ஒருவர் மட்டும் படத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்றால் அது நடிகர் சியான் விக்ரம் தான்.

அந்தவகையில் சிவாஜிக்குப் பிறகு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனக்கான இடத்தைப் பிடித்து வலம் வருகிறார் சியான் விக்ரம் இவர் நடிப்பில் வெளியான சேது, ஐ, காசி அண்ணியன், ராவணன், தெய்வத்திருமகள், தாண்டவம், இருமுகன் போன்ற பல்வேறு அசத்தலான திரைப்படங்களில் நடித்து தனது முழு திறமையை வெளிக்காட்டி சினிமா பிரபலங்களை நடு நடுங்கச் செய்தார்.

தற்பொழுது விக்ரம் பொன்னின் செல்வன் மகாவீர், கர்ணா, கோப்ரா போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து அவரது மகன் ஆதித்யா வர்மா தற்போது சினிமா உலகில் வெற்றி நடை போட்டு வருகிறார்.

இவர்கள் இருவரும் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள் என்றால் அவரது மனைவி ஷைலஜாவும் கோடிகளில் சம்பளம் பெற்று வருகிறார் அப்படி என்ன வேலை செய்கிறார் என்று தெரியுமா.

விக்ரமின் மனைவியை சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் சைகாடிஸ்ட் ஆசிரியராக பணியாற்றி வருகிறாராம்.

Leave a Comment