லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மிகப்பெரிய சண்டை.. ஒரு உண்மையான ஹீரோ என்பதை அவர் நிரூபித்து விட்டார் – மிஷ்கின் பேச்சு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் முதலில் மாநகரம் என்னும் படத்தை எடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு கார்த்தியை வைத்து கைதி, விஜய் வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து இந்தியா அளவில் பிரபலமடைந்தார்.

தற்பொழுது இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க தளபதி விஜய் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து லியோ என்னும் படத்தை உருவாக்கி வருகிறார் இந்த படமும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு சூட்டிங்கை ஆரம்பித்தது. முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து இரண்டாவது கட்ட ஷூட்டிங்காக 180 பேர் கொண்ட குழு தனி விமானத்தின் மூலம் காஷ்மீர் பறந்தது

அங்கு கடும் குளிர் என்று கூட பார்க்காமல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது நடிகர், நடிகைகளும் தீவிரமாக இந்த படத்தில் நடித்து வருகின்றனர். லியோ திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், ப்ரியா ஆனந்த், திரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் மன்சூர் அலிகான், பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்  நடித்து வருகின்றனர்.

இதுவரை லியோ திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் உடைய காட்சிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தன இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ திரைப்படம் குறித்து வெளிப்படையாகவே சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

லியோ திரைப்படத்தில் இருவரும் மோதிக் கொள்ளும் பயங்கரமான சண்டைக் காட்சி நடைபெற்றது. அப்பொழுது அந்த காட்சி முடிந்தவுடன் உடனடியாக தளபதி விஜய் என்னிடம் வந்து ஏதாவது காயம் ஏற்பட்டதா என கேட்டு கட்டி பிடித்துக் கொண்டார். அதில் பாசம் தெரிந்தது ஒரு உண்மையான ஹீரோ தான் என கூறி இருக்கிறார்.

Leave a Comment