ரஜினி,அஜித் ஆகிய இருவருக்கும் டாடா காட்டிவிட்டு வாரிசு நடிகருடன் கோர்த்த சிறுத்தை சிவா.!

தமிழ் திரையுலகில் தனது அயராத உழைப்பினால் தற்போது பல நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கும் இயக்குனர் தான் சிறுத்தை சிவா இவர் முதலில் சிறுத்தை என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே வெற்றி கண்டதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வந்தார்.

சிறுத்தை சிவா தற்பொழுது அண்ணாத்த திரைப்படத்தை முழுமையாக முடிக்க உள்ளாராம் என தகவல் கிடைத்துள்ளது ஆம் ரஜினி நடிக்கும் மொத்த படப்பிடிப்பு காட்சியும் முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஒரு சில காட்சி ஹைதராபாத்தில் எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அண்ணாத்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது எனவும் தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படத்தையும் இவர்தான் இயக்கப்போவதாக சமீபகாலமாகவே தகவல் இணையதளத்தில் வெளியாகிறது.

அதனைத் தொடர்ந்து தல அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் இவர் தான் இயக்கப் போவதாக தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி  வந்தது என்பது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்நிலையில் சிறுத்தை சிவா ரஜினியின் திரைப்படத்தை முடித்துவிட்டு சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாகவும்  அதுவும் இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த தகவல் சிறுத்தை சிவா அண்ணாத்த திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து சூர்யாவும் கிராமத்து கதையில் நடிக்க வேண்டும் போலிருக்கிறது என கூறுகிறாராம்.அது மட்டுமல்லாமல் சூர்யா சிறுத்தை சிவாவுடன் இணைந்து கைகோர்த்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடும் என்றுதான் கூறவேண்டும்.

surya
surya

இதனையடுத்து இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இதனைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்று சமூக வலைதளங்களில் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment