பொன்னியின் செல்வன் படத்திலிருந்து லீக்கான புகைப்படம் – யார் யார் இருக்காங்க தெரியுமா..

90 காலகட்டங்களை பொறுத்தவரையிலும் உண்மை மற்றும் வரலாற்றுக் கதைகளை மையமாக வைத்து பல்வேறு படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளவர் இயக்குனர் மணிரத்தினம். இப்பொழுது பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளார்.

முதல் பாகம் அதிரடியாக உருவாகி உள்ளது வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என கூறப்படுகிறது. முதல் பாகம் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் நடித்து அசத்தி உள்ளது. இந்த படத்தை மிகப்பெரிய அளவில் மக்கள் மற்றும் ரசிகர்கள்  எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிய நிலையில் தற்போது ஒரு புகைப்படம் கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு குதிரையின் மேல் சவாரி செய்து வரும் பொழுது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் லீக் செய்து வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்த படம் வேற லெவலில் இருக்கும் என கூறி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ புகைப்படம்.

ponniyin selvan – vikram

Leave a Comment

Exit mobile version