தனுஷின் புதிய முடிவால் ஆட்டம் கண்டு போயிருக்கும் முன்னணி இயக்குனர்கள்.? நமக்கு போட்டியா வந்து விடுவாரோ..

dhanush
dhanush

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மைகாலமாக வெளிவர திரைப் படங்கள் தோல்வியை தழுவுகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ஹிட் படத்தை கொடுக்க வேறு வழி இல்லாமல் தனது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து  நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

இது இப்படி இருக்க திடீரென நடிகர் தனுஷ் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன ஏற்கனவே நடிகர் தனுஷ்  ராஜ்கிரன் ரேவதி இவர்களை வைத்து பவர் பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கினார் அதனைத் தொடர்ந்து காமெடி படத்தை இப்போது இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகின. அது உண்மை இல்லை மாறாக தனுஷ் ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்ட தனது கனவு படத்தின் டைரக்சனில் மீண்டும் தனுஷ் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த படத்தில் நாகர்ஜூனா அதிதி ராவ் சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த சூட்டிங் பாதியிலே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதை தற்போது எடுக்க இருக்கிறார் என கூறப்படுகிறது இந்த படத்தின் கதை சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த ஒரு கதையாகும் இந்த படத்திற்கு நான் ருத்ரன் என பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது பாதியிலேயே கிடைப்பதால் இதன் தனுஷ் டைரக்சன் 2 என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தை அவர் மீண்டும் எடுக்க உள்ளார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது இதில் எஸ் ஜே சூர்யா ஸ்ரீகாந்தும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை எப்போது தொடங்கப் போகிறார்  என்ற செய்தியை தனுஷ் அறிவித்தால் மட்டுமே தெரியும் என கூறப்படுகிறது இந்த படத்தின் மூலம் ராஜமௌலி அல்லது மணிரத்தினத்திற்கு போட்டியாக தனுஷ் மாற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது