இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் கட்டளை தீவிரமடைந்துள்ளதால் மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன இதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதால் சாப்பாட்டிற்கே தட்டுத்தடுமாறி வருகின்றனர் இது ஒரு பக்கம் இருக்க அனைத்து விதமான வேலைகளையும் நிறுத்தி உள்ளது இன்னும் நெருக்கடியை சந்திக்க வைத்துள்ளது.
நிலையில் தன்னால் முடிந்த உதவிகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உதவ முன்வந்துள்ளனர் இப்படி இருக்கின்ற நிலையில் சினிமாவை சார்ந்து நிற்கும் பல ஊழியர்களும் தற்போது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுகின்றனர் இதனை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கோரிக்கை ஒன்றை விடுத்தார்.
உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ நடிகர்-நடிகைகள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார் இதனையடுத்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த ஜெயசித்ரா தற்போது தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை கொடுத்து அவர்களது வயிற்றில் பாலை பார்த்துள்ளார்.
ஜெயசித்ரா தனது சொந்த காசில் மூலம் இதனையெல்லாம் செய்துள்ளார் மேலும் இவரைப் போன்று பல நடிகர் நடிகைகளை உதவவேண்டும் என தற்போது சினிமா சார்ந்த பிரபலங்கள் கேட்டுக் கொண்டும் வருகின்றனர் இவர் உதவி அளித்த புகைப்படம் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.