தலைவர் 169 படம் இந்த லெவலில் தான் இருக்கு.. நெல்சன் குறித்துப் பேசிய ரெடின் கிங்ஸ்லி.!

இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தொடர் வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இதுவரை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து  ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் நெல்சன் இது ரஜினிக்கு 169 திரைப்படமாகும்.

ரஜினி கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது ரஜினிக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது அதனால் தனது அடுத்த படம் மிக பிரமாண்ட படமாக இருக்கவேண்டும் என்பதால் பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில் நெல்சன் சொன்ன கதை பிடித்துப் போகவே..

அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் தற்போது இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஆரம்பத்தில் சூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது கதைக்கு ஏற்றபடி நெல்சன் தற்போது நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் நடிகர் நடிகைகளை பார்த்து தூக்கி வருகிறார் அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் ரஜினிக்கு மகளாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளார். ஹீரோயினாக உலக அழகி ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் பல முக்கிய கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் நெல்சன். இப்படி இருக்கின்ற நிலையில் அண்மைக்காலமாக காமெடியில் பின்னி பெடல் எடுத்துவரும் ரெடின் கிங்ஸ்லி சமீபத்திய பேட்டி ஒன்றில் தலைவர் 169 படம் குறித்து பேசியுள்ளார். அவர் சொன்னது : ரஜினியின் 169 வது படத்தின் முதல் பாதியை இப்பொழுது தான் எழுதி முடித்துள்ளார் நெல்சன்.

விரைவில் முழு படத்தையும் முடித்து விடுவார். இதற்கான வேலைகள் தான் தற்பொழுது நெல்சன் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்.செம வெறியில் உள்ளார் அடித்து தூக்குவார் என கூறினார்.

Leave a Comment

Exit mobile version