மெழுகு சிலை போல் நிற்கும் நயன்தாரா செல்பி எடுத்து அசத்தும் விக்னேஷ் சிவன் – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமா உலகில் அறிமுகமான காலகட்டங்களில் இருந்து தற்போது வரை டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மற்றும் சோலோ திரைப்படங்களிலும் நடித்து  தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் ரஜினி, அஜித், விஜய், சிம்பு, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக் கொண்டவர்.

ஒருகட்டத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இளம் இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் எடுத்திருந்தார். இந்த படத்தின் சூட்டிங்கில் இருந்து விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா நட்பாக தொடங்கிய இவர்களது உறவு ஒரு கட்டத்தில் காதலாக மாறி ஆறு வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர்.

இவர்களது திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து வரும் நிலையில் விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் எங்களுக்கு என்று தனி குறிக்கோள்கள் உள்ளது அதை நிறைவேற்றிக் கொண்டு கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்று அவர் கூறியிருந்தார். மேலும் பல மாதங்களுக்கு முன்பு ஒரு இண்டர்வியூவில் நயன்தாரா எங்களுக்கு நிச்சயதார்த்தம் கூட முடிந்தது எனவும் கூறியிருந்தார்.

இப்படி காதலித்து நிச்சயம் செய்து கொண்டு இருவரும் ஒன்றாக பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று அவர்கள் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்கள் பலவற்றையும் இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருவார்கள். மேலும் தற்போது கூட நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படம்.

nayanthara
nayanthara

Leave a Comment