கடைசியாக தனது கணவரின் உடலை கட்டியணைத்து முத்தமிட்ட மீனா.! வைரலாகும் வீடியோ.

மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது இறுதியாக கணவரின் உடலை கட்டி அணைத்து கண்ணீர் மல்க முத்தமிட்டு மீனா தன் கணவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தார்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை மீனா. ஆனால் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் தான் முதன்முதலாக அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் அவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தெலுங்கில் வருடத்திற்கு பத்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்து வந்த மீனா ஒரு காலகட்டத்தில் கால் சீட் கொடுக்க முடியவில்லை.

அதன் பிறகு தமிழில் எஜமான், திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அதன்பிறகு 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிறகு 2009 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. வித்யாசாகர் பெங்களூரில் மிகப்பெரிய ஐடி கம்பெனியை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மீனாவிற்கு படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பெங்களூரில் தன்னுடைய கணவருடன் தான் இருந்து வருவார் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வித்யாசாகர் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்பொழுது மீனாவின் கணவர் வித்யாசாகர் இரண்டு நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்துள்ளார் கொரோனா காலகட்டத்தில் மீனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா தாக்கியது பிறகு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வித்தியாசாகர் மட்டும் அடிக்கடி நுரையீரல் பிரச்சனை காரணமாக அவஸ்தை பட்டுள்ளார். பெங்களூரில் அவரின் வீட்டை சுற்றி ஏராளமான புறாக்கள் இருந்ததாகவும் அந்தப் புறாக்கள் எச்சம் அவர் வீட்டை சுற்றி அதிகம் காற்றுடன் கலந்து உள்ளதால் அந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சில நபர்கள் சுவாசிப்பதால் இது போன்ற நுரையீரல் பிரச்சனை வரும் என கூறப்படுகிறது இதன் நிலையில் இரண்டு நுரையீரல் முழுமையாக பாதிக்கப்பட்டு மாற்று நுரையீராளுக்காக மூளை சாவு அடைந்தவர்களின் நுரையீரல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான எந்த ஒரு வாய்ப்பும் அமையவில்லை அதனால் மீனாவின் கணவரை காப்பாற்ற முடியாமல் போனது.

மீனாவின் கணவரின் மறைவு மீனாவை மட்டுமல்லாமல் தமிழ் திரை  உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில்  மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது இறுதியாக கணவரின் உடலுக்கு கட்டி அணைத்து கண்ணீர் மல்க முத்தமிட்டு மீனா தன் கணவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

Leave a Comment