ஜெயிலர் கொண்டாட்டத்தை தொடர்ந்து அடுத்த அதிரடிக்கு ரெடியான சூப்பர் ஸ்டார்.! இதோ மாஸ் அப்டேட்

lal salam : இயக்குனர்  ‘நெல்சன்’  இயக்கத்தில் ‘அனிருத்’ இசையமைப்பில் “ரஜினிகாந்த்” நடிப்பில் வெளியான அதிரடித் திரைப்படமான “ஜெயிலர் ” திரைப்படம் தற்பொழுது தான் திரையில் ஓடிக்கொண்டே இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில்  மோகன்லால்,  ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார்,  சுனில்,  ரம்யா கிருஷ்ணன்,  தமன்னா,  விநாயகன் மற்றும்  யோகி பாபு போன்ற பல சிறந்த கதாபாத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

ரசஜிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படம் சென்ற மாதம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகி திரையில் பிரமாண்டமாக  ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் அள்ளிக் கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று,  ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது  என்று சொல்லலாம். ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் ரஜினிக்கு தற்போது அடுத்த படத்தில் டப்பிங் பேசும் பணி வந்துவிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா  “லால் சலாம் ” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன்  கபில் தேவ்,  நிரோஷா,  விக்ராந்த்,  ஜெய் பராசரத், விஷ்ணு விஷால், தம்பி ராமையா,  செந்தில், புலி தங்கத்துரை, ஜீவிதா மற்றும் ஆகாஷ் சஹானி போன்ற சிறந்த கதாபாத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ” மொய்தீன் பாய் ” என்ற கதாபாத்திரத்தில்  நடிக்கிறார்.  இத்திரைப்படம் ஆக்சன்  மற்றும் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால்,  விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளதால் இந்தப் படம் கிரிக்கட்டை பின்னணியாக கொண்டு வருவாகியுள்ளதாக சோசியல் மீடியாக்கள் பலரால் பேசப்பட்ட வருகிறது.

“லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 29ஆம் தேதி  வெளியிட படும் என்று படக் குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருகிறார். இது குறித்த தகவலை இயக்குனர் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள பதிவில் “இன்று மிக சிறந்த நாள்….., என் தந்தையுடன் டப்பிங் பணியில் என்று குறிப்பிட்டுள்ளார்.