பேண்டை கழட்டி அதை காண்பித்தான் முதன் முறையாக பாலியல் கொடுமை பற்றி பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன்.

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பிரபலமானவர் தற்போது இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார், இவர் தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார், தற்பொழுது பெண்களுக்காக குரல் கொடுத்து அவர்களுக்காக பக்கபலமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் மனதில் நீங்கா சம்பவம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார், அதில் அவர் கூறியதாவது என்னுடைய சிறு வயதில் அப்பா ஸ்தானத்தில் இருந்த ஒருவர் அடிக்கடி என் முன்பு தனது அந்தரங்க உறுப்பை காட்டியபடி நின்றுள்ளார். ஆரம்பத்தில் அதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை ஆனால் போகப்போக வயது ஆக ஆக அவர் செய்த கொடுமையான செயல் மனதில் ரணமாக மாறியது.

இத்தனை நாட்களாக என் மனதில் இருந்து யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன், இப்படி பிரபலமான எனக்கே இந்த நிலைமை என்றால் எங்கோ இருக்கும் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கொடுமைகள் இருக்கும் என யோசித்து பார்க்க முடியவில்லை என கூறினார் அந்த பேட்டியில்.

இது எல்லாம் பழைய காலத்தில் நடந்த கதை என்று நினைக்காதீர்கள் சமீபத்தில் எனது மகளுக்கும் இப்படி ஒரு கொடுமை நடந்தது, பள்ளி முடிந்த பிறகு வீடு திரும்பிய பொழுது எனது மகள் லிஃப்டில் வந்துள்ளார் அப்பொழுது ஒருவன் தனது பேண்டை அவிழ்த்து காட்டியுள்ளான், பின்பு எனது மகள் பதறியடித்து அலறியபடி அங்கிருந்து ஓடி வந்தால் சிசிடிவி காட்சியில் அந்த நபர் யாரெனறு பார்த்த பொழுதும் சரியாக அவரின் முகம் தெரியவில்லை என கூறினார்.

இதேபோல் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏதோ ஒரு வகையில் பாலியல் தொல்லை நடந்து கொண்டுதான் இருக்கிறது இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை யோசித்துப் பார்த்தால் தான் தீர்வு கிடைக்கும் என்று தன்னுடைய ஆதங்கத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version