ரஜினி குடும்பத்தில் ஒருத்தரையும் விட்டு வைக்காத லைக்கா..! மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு ஆசையோ..!

லைக்கா என்ற தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்து வருவது மட்டுமல்லாமல் மிக பிஸியாக இருந்து வருகிறது அந்த வகையில் தற்போது ரஜினி வைத்து ஒரு திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதற்கான வேலைப்பாடுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

என்னதான் இவை உண்மையாக இருந்தாலும் இதுவரை இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை அது மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் ஒரு திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது இதை தொடர்ந்து ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் லைக்காவிடம் ஒரு டீலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருடனும் கமிட்டான லைக்கா நிறுவனம் அவருடைய இளைய மகள் சௌந்தர்யாவையும் விட்டு வைக்கவில்லை அந்த வகையில் ரஜினிகாந்த் சௌந்தர்யா நடத்தி வரும் மருந்து கம்பெனிக்கு கிட்டத்தட்ட 500 கோடி மதிப்பில்லான ஆர்டரை லைக்கா நிறுவனம் கொடுத்துள்ளது.

இதனால் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் கரன் ரஜினியின் வீட்டிற்கு நெருக்கமானது மட்டுமில்லாமல் தற்பொழுது ரஜினி லைக்கா நிறுவனத்தை வாழ வைக்கிறாரா இல்லை லைக்கா நிறுவனம் ரஜினியை வாழ வைக்கிறதா என்பது குறித்த கேள்வி எழுப்பி உள்ளது.

எது எப்படியோ லைக்கா நிறுவனத்தின் டார்கெட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அந்த வகையில் ரஜினி சன் பிச்சர் தயாரிப்பில் நடித்துவரும் ஜெயிலில் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து லைக்கா நிறுவனத்துடன் இணைவது உறுதி என பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment