விஷாலை விடாமல் துரத்தும் லைக்கா நிறுவனம் – வெளியாகுமா.. “வீரமே வாகை சூடும்” படம்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து பல்வேறு ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என நிறைந்த பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை காட்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எனிமி திரைப்படம் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இளம் இயக்குனர் சரவணனுடன் கைகோர்த்து வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

வீரமே வாகை சூடும் படம் வருகின்ற 4ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்து உள்ளது ஆனால் அதற்கு முன்பாக தற்போது ஒரு புதிய பிரச்சினையை லைக்கா நிறுவனம் கிளப்பியுள்ளது . அதாவது விஷால் படத்தை தயாரிக்க பணத்தை வாங்கி உள்ளார் ஆனால் பணத்தை திரும்ப செலுத்தாததால் உடனே லைகா நிறுவனம் பணத்தை திரும்ப தரவில்லை.

என்றால் தனக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என கேட்டுக்கொண்டது விஷாலும் கால்ஷீட் தருவதாக கூறி அனுப்பி விட்டார் ஆனால் இதுவரை கால்சீட் கொடுக்காமல் மற்ற படங்களில் நடித்து வருவதால் லைக்கா நிறுவனம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என கேட்டுள்ளது.

விஷால் தனக்கு கால்ஷீட் கொடுக்கும் பட்சத்தில் படத்தை ரிலீஸ் செய்யலாம் இல்லை என்றால் தடை போட வேண்டுமென கூறப்படுகிறது இதனால் வாகை சூடும் திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகும் என்பது மிகப்பெரிய ஒரு சிக்கலாக பார்க்கப்படுகிறது

Leave a Comment