வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்..

vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார் மற்ற மொழி திரைப்படங்களை ஹீரோவிற்காக மட்டுமல்லாமல் படம் நல்லா இருந்தால் மக்கள் பார்ப்பார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் நல்ல ஹீரோவின் திரைப்படமாக இருந்தாலும் கதை பிடிக்கவில்லை என்றால் கொஞ்சம் கூட மக்கள் பார்க்க மாட்டார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக வலம் வந்தவர் எஸ் ஜே சூர்யா இவர் அஜித்தை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக உரு மாறினார். இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பொழுது அஜித்தின் அறிமுகம் கிடைத்தது.

அப்படித்தான் அஜித்திடம் பேசி வாலி திரைப்படத்தை  எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்கினார் இதனைத் தொடர்ந்து ஒரு காதல் கதை ஒன்றை எழுதி இருந்தார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரி தொடர்பான கதை என்பதால் பிரபுதேவாவை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்தார்.

ஆனால் இந்த சமயத்தில் பிரபுதேவா கொஞ்சம் வேலையாக வெளிநாட்டுக்கு சென்று வர வேண்டிய நிலை அதனால் இயக்குனரிடம் வெளிநாட்டுக்கு சென்று வந்து விடுகிறேன் என கூறியிருந்தார் அதன் பிறகு படத்தைப் பற்றி பேசிக் கொள்ளலாம் எனவும் சொன்னார் ஆனால் பிரபுதேவா வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இதன் நிலையில் வரிசையாக தோல்வி   திரைப்படங்களில் நடித்து வெற்றிக்காக தவித்துக் கொண்டிருந்த விஜய்.

அப்பொழுதுதான் இந்த விஷயம் விஜய் காதிற்கு சென்றது அதாவது ஒரு நல்ல கதையோடு எஸ் ஜே சூர்யா காத்துக்கொண்டிருப்பது விஜய்க்கு தெரிய வர உடனே எஸ் ஜே சூர்யா அவர்களை அழைத்து பேசி விஜய் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அந்த திரைப்படம் தான் குஷி இப்படிதான் குஷி திரைப்படம் தயாரானது முதலில் இந்த திரைப்படத்தில் நடிக்கவிருந்தவர் பிரபுதேவா தான் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.