5 வருடமாக உருகி உருகி காதலித்த பிரபுவை பிரிந்ததற்கு காரணம் என்ன.? முதன்முறையாக 20 வருடம் கழித்து வாய் திறக்கும் குஷ்பு.!

சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் காதல் வயப்படுவது சகஜம் தான் அதிலும் நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து ஒரு சில காலங்களிலேயே பிரிந்து விடுகிறார்கள் அதேபோல் ஒரு சில காதல் ஜோடி மட்டும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.

அந்த வகையில் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு.  இவர் காதல் கதையை தான் தற்பொழுது நாம் பார்க்கப் போகிறோம்.  குஷ்பூ பிரபுவை காதலித்தது ஊரறிந்த விஷயம்.  இவர்கள் ஜோடி அழகாக இருப்பதாக ரசிகர்கள் முதல் சினிமா வட்டாரங்கள் வரை அனைவரும் கூறினார்கள்.

இவர்கள் இருவரும் காதலிப்பதாக அப்பொழுது பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தது. ஆனால் திடீரென குஷ்புவின் காதலை முறித்துக்கொண்டு பிரபு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் அதற்கு பிரபுவின் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் காரணம் எனவும் செய்தி வெளியானது.

kushboo
kushboo

ஆனால் அந்த செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை இந்த நிலையில் பிரபு மீது காதல் பற்றி எந்த சந்தர்ப்பத்திலும் குஷ்பு பேசியது கிடையாது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக குஷ்புவிடம் பிரபுவுடன் இருந்த அழகான காதலை பற்றி கூறுங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த குஷ்பு அது ஒரு மகிழ்ச்சியான நாட்கள் எனவும், என் வாழ்நாளில் மறக்கமுடியாத இளமையான காதல் தருணங்கள் எனவும் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் இருவரும் திருமணம் செய்யாமல் போனது துரதிர்ஷ்டவசமானது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது அந்த காதலின் முடிவு பெற்றது என்பதைக் கூறி அவரையும் அவரது குடும்பத்தாரையும் சங்கடத்தில் தள்ளுவதற்கு எனக்கு விருப்பமில்லை எனவும் தற்பொழுது தனக்கும் ஒரு குடும்பம் இருப்பதால் அதைப்பற்றி பேச வேண்டாம் எனவும் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது என்னுடைய வாழ்க்கை அழகானதாக மாற்றிவிட்டார் சுந்தர் சி எனக் கூறினார்.

இதிலிருந்து தெரிகிறது குஷ்புவின் மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு மூளையில் பிரபு இருக்கிறார் என்பது அவர் பேச்சிலேயே தெரிகிறது.

Leave a Comment