அரசியலை விட்டு மறுபடியும் சின்னத்திரையில் குதித்த குஷ்பூ.! எந்த தொடரில் தெரியுமா?.

90s காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ இவர் நடிகைகள் அந்தஸ்தை இழந்த பின் சின்னத்திரையில் கால் பதிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு குங்குமம், கல்கி என்ற தொடர்களில் வரிசையாக நடித்தார்.

நடிகை குஷ்பு சினிமாவிலும் சரி சீரியல்களிலும் சரி எந்த கதையாக இருந்தாலும் அந்த கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரமாக மாறி நடித்து அனைவரது மனதையும் கொள்ளையடித்து விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை என்றால் அது குஷ்புதான் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் தான் இவர்.

kushpu

அதன் பின்னர் சில மாதங்களாக சீரியலிலும் மற்றும் சினிமாவிலும் நடிக்காமல் இருந்த குஷ்பூ தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை என்ற தொடரின் சி என்ட்ரி கொடுத்து மங்கலம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை இதில் கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டரான நந்தா அவர்கள் நடித்து வருகிறார், அதுமட்டுமல்லாமல் இத்தொடரின் கதாநாயகியாக புதுமுகம் நடிகையான ஆஷா கவுடாவும் நடித்து வருகிறார்.

gokulathil seethai

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் பிரபலமான வடிவுக்கரசி, நளினி போன்ற சில நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடருக்கு இன்னும் ரசிகர்களை சேர்க்கும் விதமாக நடிகை குஷ்பு இணைந்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version