சூப்பர் ஸ்டார் லெவலுக்கு எதிர்பார்த்து ஃபிளாப் அடைந்த விஜய் படம்.! 24 வருடமாக தளபதியை ஒதுக்கி வரும் இயக்குனர்..

thalapathy vijay : தமிழ் சினிமாவில் இன்று எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் கே எஸ் ரவிக்குமார். இவர் ரஜினி, கமல், சரத்குமார், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றி கண்டவர்.

கே எஸ் ரவிக்குமார் இயக்குனர் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் சமீபகாலமாக இவர் படத்தை இயக்குவதை விட்டுவிட்டு குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர், சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

படையப்பா திரைப்படத்திற்கு பிறகு கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கிய திரைப்படம் தான் மின்சார கண்ணா இந்த திரைப்படத்தில் விஜய் அவர்கள் நடித்திருந்தார்கள் மின்சார கண்ணா திரைப்படத்தில் விஜயுடன் குஷ்பூ ரம்பா, மோனிகா, மணிவண்ணன், கரண், மன்சூர் அலிகான், மனோபாலா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தின் கதை பலரைக் கவர்ந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை அதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் இதற்கு முன்பு இயக்கிய படையப்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் படையப்பா லெவலுக்கு மின்சார கண்ணா திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் மின்சார கண்ணா திரைப்படம் வேறு கதையைக் கொண்டதாக இருந்ததால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

அதனால்தான் மின்சார கண்ணா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கேஎஸ் ரவிக்குமார் படையப்பா வெற்றியால் தான் மின்சார கண்ணா திரைப்படம் வெற்றி பெற முடியவில்லை என கூறி இருந்தார் அதன் பிறகு கே எஸ் ரவிக்குமார் அவர்கள் விஜயுடன் இணைந்து பல வருடங்கள் ஆகியும் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.