KPY பாலா மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க காரணமே தாடி பாலாஜி தான்.? வெளிவந்த உண்மை

KPY Bala : தொழிலதிபர்கள், சினிமாவில் நன்றாக சம்பாதிப்பவர்கள் கூட மக்களுக்கு உதவி செய்ய யோசிக்கிறார்கள் ஆனால் விஜய் டிவி புகழ் KPY பாலா. மக்கள் எங்கெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ அங்கு நேரடியாக சென்று உதவி செய்து வருகிறார்

அதனால் தற்பொழுது மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக  KPY பாலா இருந்து வருகிறார். முதலில் மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா அதன் பிறகு இல்லாமல் இல்லாதவர்களுக்கு தேடி தேடி சென்று உதவினார்.

புருஷன், மாமியாரே தனக்கு எதிராக நிற்கும் போது மகாவிற்கு சப்போர்ட் பண்ணிய வேதாச்சலம்.. கடுப்பான கௌதம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் மக்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே ரொம்ப கஷ்டப்பட்டனர். அரசாங்கம் ஒரு பக்கம் முன்னேற்பாடுகள் செய்ய சமூக ஆர்வலர்களும், சினிமா பிரபலங்கள் என பலரும் மக்களுக்கு தேடி தேடிச் சென்று உதவினார் அப்படிதான் KPY பாலா முதலில் 200 பேருக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார். அரிசி மூட்டைகள் ஒரு ஊருக்கே கொடுத்தார்.

இன்னமும் சைலண்டாக பல உதவிகளை பாலா செய்து கொண்டு தான் இருக்கிறார். இதை பார்த்த மக்கள் பெரிய பெரிய நடிகர்கள் கூட இந்த அளவிற்கு உதவவில்லை பாலாவுக்கு இருக்கும் அந்த நல்ல மனசுக்கு என்றென்றும் அவர் வாழ வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்துக் கொண்ட சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா..

பாலா மக்களுக்கு தேடி தேடி போய் உதவி செய்ய காரணம் ஒரு வகையில் தாடி பாலாஜி என கூறப்படுகிறது அது குறித்து விலாவாரியாக இங்கு பார்ப்போம்.. பாலா பழைய பேட்டி ஒன்றில் ஆரம்பத்தில் நல்ல துணி கூட போட்டுக்க இல்லாமல் இருந்த தனக்கு தனது நண்பர் ஒருவரை போய் சந்திக்க தாடி பாலாஜி அண்ணா சொன்னார்.

அவரிடம் போனால் ஒரு பை நிறைய புதிய துணிகளை தாடி பாலாஜி கொடுக்க சொன்னதாக சொல்லிக் கொடுத்தார் விஜய் டிவியில் இருக்கும் பொழுது தாடி பாலாஜி அண்ணா எனக்கு செய்த உதவி நானும் காசு வந்தால் சேர்த்துக்கிட்டே போக கூடாது  என்றும் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் நல்லா இருக்கலாம் என என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் வெளிப்படையாக பேசி உள்ளார்.

 

Exit mobile version