கதாநாயகியாக ஆகா வேண்டு என்ற கனவோட இருக்கும் குஷ்பூவின் மகள்..! உதவி செய்ய மறுத்த குஷ்பூ..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை குஷ்பூ. மேலும் இவர் தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் தமிழில் வெளியான  கிழக்கு வாசல், நடிகன், சின்னத்தம்பி, அண்ணாமலை, மனசு ரெண்டும் புதுசு, பழனி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை குஷ்பூ.

மேலும் நடிகை குஷ்பு வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். மேலும்  இயக்குனர் சுந்தர் சி என்பவரை  காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு பெண்கள்  உள்ளனர்.

மேலும் இவர்களின் மூத்த மகளான அவந்திகா அவரது நடிப்பு பயிற்சியை  லண்டனில் சிறப்பாக முடித்து விட்டார் என்றும் குஷ்பு அவரது டிவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார். என் மகள் விரும்பி கேட்டதால் நாங்கள் அவளை படிக்க வைத்தோம். ஆனால் நாங்கள் அவளை அறிமுகப்படுத்த அல்லது எங்கும் பரிந்துரைக்கவும் மாட்டோம் என்று குஷ்பு கூறியுள்ளார்.

மேலும் அவந்திகா திறமையால் மட்டும் சினிமாவில் வளர வேண்டும் என்று குஷ்பு ஆசைப்படுகிறார். என் மகள் அவந்திகா தான் எப்படியாவது வாய்ப்பை தேடிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் அவந்திகாவை சினிமா துறையில்  பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சினிமா துறையில் உள்ள அனைத்து பிரபலங்களும் தனது வாரிசுகளை எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்று பல கோடி செலவு செய்து வருகிறார்கள். ஆனால் நடிகை குஷ்பு மட்டும் தனது மகள் திறமையால் முன்னேறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment