அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கேஜிஎப் 3 யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ஒட்டு மொத்த சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திரைப்படம் என்றால் அது கேஜிஎப் மட்டும்தான். இந்தத் திரைப்படம்  தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  ஏகப்பட்ட வரவேற்பு பெற்று வெற்றியடைந்துள்ளது.

இத் திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களின்  ரசிகர்கள் மத்தியில் ஒரு நீங்கா இடம் பிடித்தனர். அதிலும் கேஜிஎஃப் படத்தில் யாஷ் வைத்திருந்த  இரு சக்கர வண்டியை போல் ரசிகர்களும் அவரவர் வண்டியை மாடிலேஷன் செய்து அங்கும் இங்கும் மாஸாக சுற்றி திரிந்த வருகிறார்கள்.

கேஜிஎஃப் திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நில் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தின் வசூல் சுமார் 1,100 கோடியை தாண்டி வெற்றிநடை போட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கேஜிஎப் சாப்டர் 2  கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் முடியும் தருவாயில் கே ஜி எஃப் சாப்பிட்டு 3 ஆரம்பமாகும் என தெரியவந்துள்ளது.

அதற்கு ஏற்றவாறு கே ஜி எஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜிஎப் சாப்டர் 3 திரைப்படத்திற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாக சமூகவலைதளங்களில்  செய்திகள் பரவின.

இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கே ஜி எஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் உலா வரும் செய்திகள் அனைத்தும் யூகங்கள்தான். எங்களுக்கு முன்னால் நிறைய அற்புதமான திட்டங்கள் உள்ளன, நாங்கள் எந்த நேரத்திலும் KGF3 தொடங்கப்படாது. அதை நோக்கிய பணியைத் தொடங்கும் போது, நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம் என விளக்கமளிக்கப்பட்டது.

Leave a Comment