நடிகர் யாஷ் கேஜிஎப் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அட இவ்வளவு தானா..!

கன்னட சினிமாவை இந்திய அளவுக்கு எடுத்துச் சென்ற திரைப்படம்தான் கே ஜி எஃப். கடந்த 2019ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் கே ஜி எஃப் இரண்டாவது பாகம். இதற்கு முன் வெளியாகிய கேஜிஎப் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் வசூலில் சாதனை படைத்தது.

அதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்தார்கள் இந்த படம் கடந்த மூன்று வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் வெளியானது. அதுமட்டுமில்லாமல் கேஜிஎப் இரண்டாவது பாகம் விஜயின் பீஸ்ட் திரைப்படத்துடன் மோதியது.

அதனால் வசூலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் இந்தநிலையில் பீஸ்ட் திரைப்படம் வசூலில் அடி வாங்கியதாகவும் கேஜிபி இரண்டாவது பாகம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.  கேஜிஎப் திரைப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்கிற்கு மேல் வெளியாகியது அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் முதல் 250 திரையரங்குகள் தான் KGF திரைப்படத்திற்கு கிடைத்தது.

ஆனால் போகப்போக பீஸ்ட் திரைப்படத்தை தூக்கிவிட்டு கேஜிஎஃப் திரைப்படத்தை திரையிட ஆரம்பித்துவிட்டார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். இந்த நிலையில் ராக்கி பாயின் அதிரடியான நடிப்பில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 700 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்காக நடிகர் யாஷ் அவர்களுக்கு பதினைந்து கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment