தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட கீர்த்தி சுரேஷ்.! அப்போ இனி பட வாய்ப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர்களில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். இவர் பைலட்ஸ் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இதனைத்தொடர்ந்து ரஜினி முருகன்,தொடரி, தானா சேர்ந்த கூட்டம், பைரவா, ரெமோ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷ் இரண்டு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் தங்கையாக நடிக்கிறார் இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதனைத்தொடர்ந்து தெலுங்கு நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி கூட வேதாளம் திரைப்படத்தின் ரீமேக் திரைப்படத்தில் இவருக்கு தங்கையாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இது குறித்த வீடியோ ரக்ஷா பந்தன் நாளை முன்னிட்டு வெளியானது.

keerthi suresh
keerthi suresh

முன்னணி நடிகையாக இருந்து கொண்டு அவரது கெரியரில் தானே மண்ணை அள்ளிக் போட்டு கொள்கிறார் என்று விமர்சனங்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளன. கீர்த்தி சுரேஷ் அவர்களை என்னதான் கூடுதல் சம்பளம் கொடுக்கிறேன் என்று கூறியிருந்தாலும் இப்படி தொடர்ந்து தங்கையாக நடிக்க கூடாது என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment