மறைந்த சித்ரா பற்றி உருக்கமான பதிவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் விஜே சித்ரா, இவர் இந்த சீரியல் மூலம் சமூக வளைதளத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் படப்பிடிப்பை முடித்துவிட்டு 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த இவர் அதிகாலையில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.  ஹோட்டலில் தங்கும் பொழுது தன்னுடைய வருங்கால கணவருடன் தான் இருந்துள்ளார்.

இவர் இருந்தும் இவ்வாறு செய்துள்ளது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. சித்ராவின் இழப்பை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்ராவின் மறைவிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வந்தார்கள், அதுமட்டுமில்லாமல் ஷாலு ஷம்மு தவறான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து விட்டாயே என பதிவு ஒன்றை வெளியிட்டார் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் இவ்வளவு சீக்கிரமா சென்றுவிட்டார் என அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment