சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்.! வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபல நடிகை.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், மிக வேகமாக வளர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர், இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். என்னதான் இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் இவர் மீது விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது.

இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் மகாநதி திரைப்படத்தில் நடித்து தேசிய விருது வாங்கினார். அதன்பிறகு விமர்சனம் செய்தவர்கள் அமைதியானார்கள், இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்தநிலையில் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜய்தேவ்கான் நடிக்கும் மைதான் திரைப்படத்தில் நடிப்பதற்கு  கமிட்டானார், இவர் கமிட் ஆனது பலருக்கும் தெரிந்ததுதான் ஏனென்றால் போனி கபூர் தனது அலுவலகங்களை கீர்த்தி சுரேஷுக்கு சுற்றிக் காட்டிய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.

பாலிவுட்டில் அறிமுகம் என்பதால் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார், ஆனால் இவர் ஒலியானது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டதற்கு சமம் ஆகிவிட்டது, ஏனென்றால் மைதான் திரை படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் கமிட்டானார், இவருக்கு முதலில் கொழுகொழுப்பான தேகம் இருந்ததால் அந்த கதாபாத்திரத்திற்கு செடாவார் என கமிட் செய்தார்கள்.

இவர் விரைவாக உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியதால் சில காட்சிகள் படமாக்கப்பட்டு உடல் பொருந்தவில்லை என படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள், அதன் பின்பு அந்த கதாபாத்திரத்திற்கு நடிகை பிரியாமணியை  படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் கீர்த்தி சுரேஷ்க் ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்களே என குமரி குமரி அழுகிறார் மனதுக்குள்.

இந்த திரைப்படம் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு தழுவி எடுக்கப்பட்ட திரைக்கதை ஆகும்.

Leave a Comment

Exit mobile version