ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்துக்குள்ளான கயல் சீரியல் நடிகை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் சீரியல்தான் கயல் இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தருவது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரட் சீரியல் ஆக மாறிவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சன்டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களும் வித்தியாசமான கதையம்சம் உடையதாக இருப்பது மட்டுமில்லாமல் அந்த சீரியலில் நடிக்கும் நாயகிகள் சிறிய வயதில் இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருப்பதன் காரணமாக எளிதில் பிரபலமாகி வருகிறது.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற சீரியலிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

kayal-1
kayal-1

வில்லி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கென்ன ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.அந்த வகையில் யாரடி நீ மோகினி சீரியல்க்கு பிறகாக நமது நடிகை நடிக்கும் சீரியல்தான் கயல்.எப்பொழுதும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நமது நடிகை இந்த சீரியலில் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நமது நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நடந்த விபத்து குறித்த தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அப்போது அவர் கூறியது என்னவென்றால் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது நான் பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டேன் இந்த விபத்து நடந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் தற்போது நான் குணமடைந்து நன்றாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

kayal-1
kayal-1

Leave a Comment