அனைவருக்கும் குட் நியூஸ் சொன்ன கயல் சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகர் நடிகைகளைவிட சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் சின்னத்திரை பிரபலங்கள் தாங்கள் நடிக்கும் முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள் மேலும் தங்களுக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ளும் இவர்களுக்கு எளிதில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரியமானவள் என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் தான் அபி நவ்யா. இவர் இந்த சீரியலினை தொடர்ந்து கண்மணி சீரியல் சினேகா நடித்திருந்தார் மேலும் இவர் செய்தி வாசிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது இவர் சன் டிவியில் முக்கியமான சீரியலாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

மேலும் இவருடைய சிறந்த நடிப்பு ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் இருத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் நடிகை அபி நவ்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட்டுள்ளார் அதாவது இவர் கடந்த ஆண்டு சீரியல் நடிகர் தீபக் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

அபி நவ்யா மற்றும் தீபக் குமார் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் மேலும் தீபக் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் நவீன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் புன்னகை என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வருகிறார்.

abi navu
abi navu

இப்படிப்பட்ட நிலைகள் சில வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினர்கள் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர் இப்படிப்பட்ட நிலையில் அபி நவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் புகைப்படத்தின் மூலம் ஷேர் செய்திருக்கிறார் மேலும் தீபக் உடன் இவர் இணைந்து எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment