மாவட்ட ஆட்சியரிடம் போலீஸ் மீது புகார் அளித்த நாகர்கோவில் காசியின் தந்தை.!!

Kasi’s father complaining to collector: நாகர்கோவில் காசி என்ற 26 வயது இளைஞர் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகிறார். இவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தனது கட்டுடலை காட்டி பெண்களை மாயவலையில் சிக்க வைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துவைத்து அதன்மூலம் அவர்களிடம் மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இவர் குறிப்பாக படித்த பணக்கார பெண்ணிடம் தனது வேலையை காட்டி உள்ளார். அப்படி மாட்டிய கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் காசி மீது கன்னியாகுமரி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் கடந்த மாதம் 24ம் தேதி காசி கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதிகள் போலீஸ்சாரிடம் காசியை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளனர். அதன் படி போலீசார் விசாரணையை தொடர்ந்துள்ளனர். மேலும் போலீஸாரிடம் காசி பயன்படுத்திய லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் காசியின் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் போலீஸ் தனது மகனை என்கவுண்டரில் போட திட்டமிட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

Leave a Comment