கருத்தம்மா பட நடிகர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி.

karuthama movie actor raja Re-entry in cinema after many years:இயக்குனர் பாரதிராஜாவால் கடலோர கவிதைகள் திரைப்படத்திலன் மூலம் பிரபலமானார் நடிகர் ராஜா. எண்பது தொண்ணூறுகளில் இவரின் அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மென்மையான பார்வை, சிரிப்பு, மெல்லிய உடம்பு போன்றவற்றால் இளசுகளை வெகுவாக கவர்ந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் விட்டுக்கொரு கண்ணகி, வளையல் சத்தம், கருத்தம்மா,வைதேகி, வேதம் புதிது, உழைத்து வாழ வேண்டும், வா அருகில் வா, மாப்பிளை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதை தொடர்ந்து புது நடிகர்கள் அதிகம் திரையுலகிற்கு வர ஆரம்பித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. மேலும் அதனைப் புரிந்து கொண்ட இவர் சினிமாவில் இருந்து வெளியேறி இத்தனை வருடங்களாக சம்பாதித்த பணத்தை வைத்து மார்பிள் பிசினசை துவஙகினார். தற்போது இவருக்கு பிசினஸிலும் நல்ல வெற்றி கிடைத்தது.

அவர் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுப்பதைப் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது நடிகர் விக்ரமும் இவரும் இந்த சினிமா இண்டஸ்ட்ரியில் நல்ல நண்பராக இருந்தனர். ஒரு நாள் விக்ரம் ராஜாவிற்கு போன் செய்து எனது மகன் நடிக்கும் திரைப்படத்தில் அப்பாவாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தன் நண்பனின் பேச்சை மீற முடியாமல் அவரும் 18 வருடங்களுக்கு பிறகு திரும்பவும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். விக்ரம் மகன் நடித்த ஆதித்யாவர்மா என்ற திரைபடத்தின் மூலம் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment