அவசர சிகிச்சை பிரிவில் கார்த்திக் பதட்டத்தில் குடும்பத்தினர்.!அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ் திரை உலகில் நிறைய ஹிட்டடித்த திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரையும் புகழையும் தேடிக்கொண்ட நடிகர்தான் கார்த்திக் இவர் வாரிசு நடிகராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார் அதன்பின் பல திரைப்படங்களில் பல ஹிட்டடித்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்ததன் மூலம் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி வந்தார்.

அவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு நவரச நாயகன் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் கொடுத்து விட்டார்கள் மேலும் சுந்தர்சியும் இவரும் இணைந்தால் அந்த திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் அதிக நாள் ஓடி சூப்பர் ஹிட்டாகிருக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

சினிமாவில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.  ஒரு கட்டத்தில் கார்த்திக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காததால் அவர் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார் அதுமட்டுமல்லாமல் ஒரு சொந்தமான கட்சியை கூட தொடங்கினார்.

இதன் பின்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்தி உடல் நிலை லேசாக சரியான பின் உடனே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பிரபல கட்சிக்கு ஆதரவாக இருக்கும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி கார்த்தி கேட்காமல் இருந்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது இதனால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் இவரது உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் மிகவும் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.

கார்த்திக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இல்லை என்பது மட்டும் தெரியவந்துள்ளது மூச்சுத்திணறல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

karthik
karthik

இதனால் கார்த்தியின் குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும் மேலும் கார்த்தி கூடிய சீக்கிரம் உடல்நிலை சரியாகி மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என இவரது ரசிகர்கள் பலரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Leave a Comment