லவ் எப்படா பண்ணுவோம்னு ஏங்கித் தவிச்சேன்.! பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட கார்த்தி.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள கார்த்தி,த்ரிஷா,பிரபு, விக்ரம்,ஐஸ்வர்யா ராய்,ஐஸ்வர்யா லட்சுமி,சரத்குமார்,ஜெயம் ரவி,ஜெயராம், பார்த்திபன்,விக்ரம் பிரபு போன்ற பல சினிமா பட்டாளங்கள் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக பல இடங்களில் செல்ல இருக்கிறார்கள்.

மேலும் பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சியில் கல்லூரியில் படிக்கும் பொழுது எப்படா லவ் பண்ணுவோம்னு ஏங்குவேன் என நடிகர் கார்த்தி பேசி உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது ஆம் இந்த நிகழ்ச்சியில் பேசி உள்ள கார்த்தி தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டாராம்.

முதலில் நான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை பற்றி சொல்லனும்னா சூர்யா அண்ணா ஒரு மேடையில எது நமக்கு வேணுமோ ரொம்ப தவிக்கிறோமோ அது நமக்கு கிடைச்சே தீரும்னு சொன்னாரு. அந்த மாதிரி நான் படிச்சது பாய்ஸ் ஸ்கூல் காலேஜ்ல மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஒரு பொண்ணுங்க கூட இருக்க மாட்டாங்க.

நாமெல்லாம் எப்படா லவ் பண்ணுவோம்னு ஏங்குனதுக்கு வந்தியத்தேவன்  கதாபாத்திரம் சரியாக அமைந்துவிட்டது என்று கூறினாராம். மேலும் ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா,ஐஸ்வர்யா லட்சுமி எல்லோருக்கும் லைன் போட்டிருக்கும் என கார்த்தி நகைச்சுவையாக பேசியதாக இந்த தகவல் இணையத்தில் வைரலாகி  வருகிறது.

karthi
karthi

மேலும் இதில் பேசிய கார்த்தி எல்லோரும் நடிக்க வேண்டும் என நினைத்த கதாபாத்திரம் எனக்கு கிடைச்சிருக்கு நான் உண்மையான வாழ்க்கையிலும் ஜாலியான வந்தியத்தேவன் கதாபாத்திரம் என்று இது போன்ற பல விஷயங்களை ரசிகர்களுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment