புளியமரத்தில் தலைகீழாக தொங்கும் கார்த்தி.! ஒருவேளை சின்ன வயசு நினைவு வந்துடுச்சோ

நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்ற அடையாளத்தோடு தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் இரண்டு பேருமே தற்போது சினிமாவின் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கும் நடிகர்கள்.

அதுலயும் கார்த்திக் தற்போது நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் ஓரளவு நன்றாக வசூல் பெற்றிருந்தது.

மேலும் கார்த்திக் நடிப்பில் தற்போது மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் சுல்தான் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துவிட்டு அந்த புகைப்படத்தில் நான் சிறுவயதில் புளியாமரத்தில் தொங்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

ஆனால் அது இப்போதுதான் நிறைவேறியதாக கூறுகிறார் மேலும் இவர் பதிவு செய்த புகைப்படத்தை பார்த்து இவரது ரசிகர்கள் பலரும் என்ன புளியாமரத்தில் இப்படி தொங்குகிறீர்கள் பார்த்து அடிபட்டு விடப் போகிறது என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

karthik
karthik

Leave a Comment