நெற்றிப்பொட்டில் அடித்தது போல் கர்ணன்.. பெண் எம்பி சுளிர் கருத்து.!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் அண்மைக்காலமாக மாபெரும் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கர்ணன்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வசூலை வாரி குவித்து வருகிறது. படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள்  கொடியங்குளம் வன்முறை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் ஒரு குறிப்பிட்ட ஆட்சி காலத்தில் வன்முறை நடைபெற்றதை இந்த  திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது அதனால்தான் அரசியால் சார்ந்த விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கர்ணன் படத்தை பற்றி பெண் எம்பி ஜோதிமணி அவர்கள்  தியேட்டரில் கர்ணன் குறித்து அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியதாவது கர்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, நியாயத்தை,வலியை,எதிர்வினையைப் பேசும் ஒரு வலிமையான படம். நெஞ்சை உலுக்கும் காட்சிகளும்,குறியீடுகளும் நிறைய. அந்த உச்சந்தலை முத்தம்  சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம். பாராட்டுகள் மாரி செல்வராஜ்!

இந்த கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்து இருந்தார் அதுமட்டுமில்லாமல் வில்லனாக நட்டி நடராஜ் லால், கௌரி கிஷன்,  லட்சுமி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி மன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்  மக்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது.

Leave a Comment