70 க்கும் மேற்ப்பட்ட பெண்களை காதல் வலையில் விழவைத்து.! வாழ்க்கையை சூறையாடிய காசி இதில் பிரபல நடிகரின் மகளும் இருக்கிறாரா.? அதிர்ச்சி தகவல்

பள்ளிச் சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை காவலர் மகள் முதல் சினிமாவில் பிரபல நடிகரின் மகள் என 70க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர் இன்ஸ்டகிரம் கிரிமினல் சிக்கியது எப்படி மோசடி செய்தவர் யார் தெரியுமா.?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி, காயின்  தந்தை தங்கபாண்டியன் அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார்.  கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு உதவியாக தந்தை கடைகளிலிருந்துள்ளார்  உடன் படிக்கும் சிறுமிகளை பாலியல் அறையில் வீழ்த்த காதல் நாடகம் ஆடுவார். காதல் வலையில் விழுந்தவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வார் காசி என போலிசார் கூறுகிறார்.

உள்ளூர் காவல் நிலையத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவர் மகளை தனது பாலியல் ரீதியாக பயன்படுதிகொண்டார் காசி, தற்பொழுது வெளியே சொல்லாமல் காவலர் பணி இடமாற்றம் வாங்கிச் சென்று விட்டார் என்று கூரபாடுகிறது. பேஸ்புக்  இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பல்வேறு பெயர்களில் பல கணக்குகளை தொடங்கி அதில் தினமும் உடற்பயிற்சி செய்வது போலவும் புஜபல பராக்கிரமத்தை வெளியே காட்டி புகைப்படம் வெளியிடுவதும், ஏழைகளுக்கு உதவுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தி வருகிறார் காசி.

இந்த வீடியோக்களை பார்க்கும் பள்ளி சிறுமிகள் முதல் இளம் பெண்கள் வரை உணர்ச்சிவசப்படுவது, எவ்வளவு நல்லவராக இருக்கிறார் என உடனே ஷேர் செய்ய தொடங்கும் அந்தப் பெண்களின் கணக்குகளை ரகசியமாக பின் தொடர்ந்து அவர்களின் பின்னணிகளை தெரிந்து கொள்வார். அவர்களில் பள்ளி இறுதி வகுப்பு முடித்தவர்கள் கல்லூரி முதலாமாண்டு படிக்கும் இளம் பெண்கள் இருந்தால் அவர்களை சரியாக அடையாளம் கண்டுபிடித்து வைத்து அவர்களை தனியாக தொடர்புகொண்டு நட்பு ஏற்படுத்திக் காதல் நாடகம் போடுவார்.

காதல் வலையில் விழும் 16 முதல் 20 வயது பெண்களை தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் தனக்கும் அவர்களுக்கும்  உள்ள அந்தரங்க வீடியோ காதல் வலையில் விழும் பெண்ணுக்கு தெரியாமல் பதிவு செய்து வைத்து கொண்டு பின்னர் அவர்களது தொடர்பு எண்களை தனது நண்பர்களிடம் கொடுத்து பேசச் சொல்வார் நண்பர்களுடனான பேச்சு வார்த்தைகளை சுட்டிக்காட்டிய தனது நட்பை முறித்துக் கொண்டு விடுவார் காசி.

இப்படி பள்ளி சிறுமியை தனது பாலியல் வெறிக்கு பயன்படுத்தும் காசி வசதி படைத்த இளம் பெண்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை ஆட்டையை போட்டுள்ளார். திட்டமிட்டு அவர்களை தொடர்புகொண்டு காதலிப்பதாக கூறிய திருமணம் செய்தால் உன்னை தான் திருமணம் செய்வேன் என உருகி உருகி மயங்கி பேசுவார். இப்படி பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மகளை காதலிப்பதாக கூறி அவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாயை கொஞ்சம் கொஞ்சமாக கறந்துள்ளார், ஒரு கட்டத்தில் காசி தன்னை ஏமாற்றுவது தெரிந்த அந்தப் பெண் அவரிடம் கேட்டபோது அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக கூறி அந்தப் பெண் சத்தமில்லாமல் விலகிவிட்டார்.

அவரைப்போல காசியிடம் சிக்கியவர் தான் சென்னையைச் சேர்ந்த அந்த இளம்பெண் பொள்ளாச்சி பற்றிய வீடியோவில் காசிக்கு எதிராக கருத்துச் சொன்ன பெண் டாக்டரை பேசிப் பேசி தனது காதல் வலையில் விழ வைத்தார், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை தனது குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தி வைக்கப் போவதாக நாகர்கோவிலுக்கு வரவழைத்தார். நாகர்கோவிலுக்கு அவர் சென்றதும் குடும்பத்தில் நிலைமை சரியில்லை என்று கூறி கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று அங்கு தனக்கு தெரிந்த ஒரு ஹோட்டலில் அந்தப் பெண் டாக்டரை தங்கவைத்தார்,

அப்போது பெண் டாக்டருக்கு தெரியாமல் அந்த அறையில் ரகசிய கேமராவை பொருத்தி கொள்ள அந்த கேமராவில் சிக்கிய பெண் டாக்டரின் அனைத்து நடவடிக்கைகளும் பதிவாகியிருந்தன இதையடுத்து திருமணம் செய்தால் பெண் டாக்டரை தான் திருமணம் செய்வேன் என காசி நாடகமாடினார் தனது குடும்ப உறுப்பினருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக பெண் டாக்டரிடம் இருந்து ஒரு லட்சம் இரண்டு லட்சம் என ஆறரை லட்சம் ரூபாய் வரை கறந்துள்ளார்.

இந்த நிலையில்தான் காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெண் டாக்டரை தொடர்பு கொண்டு காசியின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளார், மன உளைச்சலுக்கு ஆளான பெண் டாக்டர் காசியிடம் இருந்து விலகத் தொடங்கினார் ஆத்திரமடைந்த காசி சரி பெண் டாக்டரை பணம் கேட்டு அதிகமாக தொந்தரவு செய்ய ஆரம்பித்தார் பின்பி பெண் டாக்டர் பணம் தரமுடியாது என ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

அப்போதுதான் தனது நிஜ ரூபத்தை காட்டி பணம் தராவிட்டால் உன்னுடைய  அந்தரங்கம் படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்,  ஆனால் பெண் டாக்டர் அதற்கு மசியாமல் போகவே புதன்கிழமை அன்று தனது போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பெண் டாக்டர் கன்னியாகுமரி விடுதியில் தங்கியிருந்தபோது ரகசிய கேமராவை எடுத்து அந்தரங்க வீடியோக்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் அவற்றை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஆன்லைனில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி காசி மீது உடனடியாக நடத்திய விசாரணையில் நடந்தது அனைத்தும் உண்மையே என தெரியவந்தது என்று காவல் நிலைய போலீசார் காசியை கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து மூன்று கட்டங்களாக பாஸ்வேர்ட் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர் அதில் 70 இற்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் படங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.

மேலும் விசாரணையில் சென்னையில் வசிக்கும் பிரபல நடிகர் ஒருவரின் மகளையும் காசி தனது காதல் வலையில் விழ வைக்க முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது அந்த நடிகர் காவல்துறையை அணுகியதால் தான் பயந்துபோய் ஒதுங்கி விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது காசி செல்போனில் உள்ள விஷயங்கள் வெளியே வந்தால் நாகர்கோவில் அடுத்த பொள்ளாச்சி விஷயமாக சூடு பிடிக்கும் என்கின்றனர் போலீஸார் காசியை சட்டரீதியாக விசாரித்தால் அவருடன் நட்பை உள்ள தொழில் அதிபர்கள் அரசியல்வாதிகளின் மகன்களின் வேலைகளும் அம்பலத்தில் ஏறும் என்கின்றனர் போலீஸார்.

https://youtu.be/LIc8HWIGEdc

Leave a Comment