பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிய கண்மணி மனோகரன் – அந்த சீரியல் குறித்து வெளிப்படையாக கூறிய தகவல்.?

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியலை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இயக்குனர் பிரவீன் பெண்ணெட் எடுத்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை தொடர்ந்த நம்பர் 1 சீரியல் என்ற இடத்தை தக்கவைத்துள்ளது.

மேலும் தமிழ் சீரியல்களிலே டிஆர்பிலும் தொடர்ந்தும் முன்னிலையில் வகிக்கும் சீரியல் பாரதிகண்ணம்மா ஆகும். தற்போது இந்த சீரியலில் கதாநாயகியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சில நாட்களாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கண்ணம்மா அவரது பிறந்த நாள் அன்று தனது மகளுக்கு உனது அப்பா யார் என்பதை நான் கூறுகிறேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து லக்ஷ்மியின் அப்பாவான பாரதி இடமும் கண்ணம்மா சென்று பிறந்தநாள் பங்ஷனுக்கு வருமாறு கூறியிருந்தார். இதனால் தற்போது கண்ணம்மா வீட்டில் கண்ணம்மா, லட்சுமி போன்ற பலரும் பாரதியின் வரவிற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தநிலையில் அண்மையில் பாரதிகண்ணம்மா சீரியலில் துணை கதாநாயகியாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து கண்மணிக்கு பதில் வேறு ஒரு பிரபல மாற்றப்பட்டு அவர் சாயலிலேயே சிறப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் முதலில் நடித்து வந்த கண்மணி மனோகரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பாரதிகண்ணம்மா சீரியல் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது நான் கடந்த மூன்று வருடங்களாக இந்த சீரியலில் நடித்து வருகிறேன்.

எனக்கு முதல் சீரிலும் இதுதான் என்னை மக்களிடம் கொண்டு சேர்த்து. ஆனால் இந்த சீரியல் மூலம் நான் பல வாய்ப்புகளை இழந்து விட்டேன். எனவும் கூறியுள்ளார். தற்போது கண்மணி மனோகரன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு முக்கிய சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment