மொத்த சொத்தையும் அடகு வைத்து எமர்ஜென்சி படத்தை தயாரித்துள்ள கங்கனா.! வெறும் 500 ரூபாயுடன் மும்பை வந்தேன்.. பரபரப்பு பேச்சு

நடிகை கங்கா ரனாவத் சமீப பேட்டி ஒன்றில் நான் வசிக்கும் வீடு உட்பட மதிப்பு தாக்க பொருள்களை அனைத்தையும் அடமானம் வைத்து தான் எமர்ஜென்சி படத்தை தயாரித்திருக்கிறேன் என கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை கங்கனா ரனாவத்.

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுடைய வாழ்க்கை வரலாறு படமான தலைவி திரைப்படத்தில் கங்கனா ரானாவத் நடித்தது அசதி இருந்தார். இந்த படம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று தந்தது மேலும் தமிழ் சினிமாவை விட இந்தியில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் படங்களின் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கி தயாரித்தும் வருகிறார்.

அந்த வகையில் தற்போது எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார் அந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருகிறது இந்திரா காந்தி வேடத்தில் தான் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய கங்கனா நான் சொந்தமான ஒரு ஹோட்டல் தொடங்க வேண்டும் என ஆசைப்பட்டேன் ஆனால் பொருளாதார பிரச்சினைகளால் அது நிறைவேறாமல் போனது நான் வசிக்கும் வீடு உட்பட விலை மதிக்க பொருட்கள் அனைத்தையும் அடமானம் வைத்து தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் நான் மும்பை வரும் பொழுது வெறும் 500 ரூபாய் உடன் வந்தேன் ஒரு வேளை இந்த படத்தில் நான் முதலீடு செய்த மொத்த பணத்தையும் இழக்க வேண்டி சூழல் வந்தால் மும்பை வந்த பொழுது எந்த நிலையில் இருந்தேனோ அதே நிலைமைக்கு சென்று விடுவேன் ஆனால் தன்னம்பிக்கையை இழக்க மாட்டேன் சொந்த காலில் தான் இருப்பேன் என கூறியுள்ளார்.

Leave a Comment