சினிமாவில் மிகவும் கண்ணியமான நடிகை என்றால் அது கனகா தான்… அவருக்கா இந்த நிலைமை என கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்…

90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை கனகா. இவருடைய அம்மாவும் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கனகாவின் அம்மா பிரபல இயக்குனரின் உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கனகாவின் அம்மா அப்பாவிற்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதன் பிறகு கனகாவின் மூன்றரை வயதில் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகாவின் தந்தை தன்னுடைய மனைவியை ஒரு நபருடன் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக கூறியிருந்தார்.

இப்படி இருக்கும் நிலையில் நடிகை கனகா வளர்ந்து வரவே தன்னுடைய 13 வயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபா அரசியல்வாதி ஒருவரை கட்டாய திருமணம் செய்து கொண்டார் என்று சில பத்திரிக்கையில் கூறப்பட்டது.

அதாவது கனகா சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த அரசியல்வாதிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது அப்போது ஜோதிடர் ஒருவரை சந்தித்திருக்கிறார். அந்த ஜோதிடரும் கன்னி கழியாத இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நோய் நொடி இல்லாமல் வாழ்வார் என்று ஒரு பொய்யான ஜோதிடம் சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்டு அந்த அரசியல்வாதி கனகாவை கட்டாய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நடிகை கனகாவின் தாய் இறந்துவிட்டார். அந்த சமயத்தில் ஆவிகளிடம் பேச வைக்கக்கூடிய ஒரு மாந்திரீகப் பெண்ணை பார்த்திருக்கிறார் அந்த நேரத்தில் அவரிடம் சென்று இருக்கும்போது அமெரிக்க நாட்டு நபரை சந்தித்து இருக்கிறார் நடிகை கனகா.

அதன் பின்னர் அந்த அமெரிக்கா நாட்டு நபரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் திருமணம் செய்து கொண்ட 15 நாட்களில் அந்த அமெரிக்க நபர் கனகாவிற்கு கம்பி நீட்டி விட்டார். அதன் பின்னர் தன்னுடைய கணவரை கண்டுபிடித்து தருமாறு நடிகை கனகா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு அப்படியே போடப்பட்டது.

அதன் பிறகு யாரையும் நம்பக்கூடாது என்று எண்ணிய கனக வீட்டை விட்டு வெளியே வராமல் வரும் வாய்ப்பையும் உதறி தள்ளிவிட்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடிகை கனகா அவர்கள் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த போது ஒரு முறை கூட தவறாக கிசுகிசுக்கப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு ஒழுக்கமான நடிகையாக வாழ்ந்திருக்கிறார் நடிகை கனகா.

பொதுவாக நடிகைகள் சினிமாவிற்கு முன்பு ஒழுக்கம் அற்று வாழ்ந்து இருந்தாலும் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமைந்து விடுகிறது. ஆனால் நடிகை கனகாவிற்கு அப்படியே எதிராக அமைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த தகவலை சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment