பக்காவா ப்ளான் போட்டு காய் நகர்த்தும் கமல் ராஜமவுலி..! அலப்பறை கொடுக்க காத்திருக்கும் ரசிகர்கள்..!

விக்ரம் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கண்டு ரசித்த நடிகர் கமலஹாசன் அவர்கள் அதன் பிறகு முழு நேரமும் சினிமாவில் களமிறங்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் அரசியல் கட்சி தொடங்கிய நாளில் இருந்து நடிப்பில் அதிக அளவு கவனம் செலுத்தாமல் இருந்த கமலஹாசன் தற்பொழுது திடீரென இப்படி மாறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நடிகர் கமல் அவர்கள் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி வருகிறார் அந்த வகையில் இளம் நடிகர்களை வைத்து பல்வேறு திரைப்படங்களை தயாரிப்பதற்கு இவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் இது ஒரு பக்கம் மிக்க சமீபத்தில் கமல் அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பொதுவாக மணிரத்தினம் என்றாலே ரஜினி கூட்டணியாக தான் இருக்கும் ஆனால் எதிர்பார விதமாக இப்படி ஒரு கூட்டணி அமைந்தது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது அதுமட்டுமில்லாமல் மற்றொரு இன்பர்ச்சியும் உள்ளது அதாவது தெலுங்கு திரை உலகில் மிகப் பிரமாண்டமான இயக்குனராக வலம் வருபவர் தான் ராஜமவுலி இவர் பாகுபலி ஆர் ஆர் ஆர் போன்ற மிகச் சிறந்த திரைப்படங்களை இயக்கி உலக அளவில் பிரபலமாகியுள்ளார்.

அந்த வகையில் ராஜமவுலிக்கு தமிழ் சினிமாவில் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள் இதனைத் தொடர்ந்து தமிழ் ஹீரோக்களை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தற்பொழுது ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ராஜமௌலி மற்றும் கமல் ஆகிய இருவரும் ஒரு விழாவில் சந்தித்து பேசி உள்ளார்கள்.

அந்த விழாவில் இவர்கள் மட்டும் இன்றி சினிமாவில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள் அதில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் லோகேஷ் கனகராஜ் பிரித்திவிராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் பல்வேறு விஷயங்களை குறித்து அப்போது பேசி உள்ளார்கள்.

மேலும் கமல் மற்றும் ராஜமௌலி இருவரும் இணைந்து பணி புரிவது குறித்தும் ஆலோசனை கேட்கப்பட்டது அப்பொழுது ராஜமவுலி மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க முயல்கிறேன் அதேபோல நடிகர் கமலும் மணிரத்தினத்தின் திரைப்படம் மற்றும் விக்ரமின் அடுத்த பாகம் என பிஸியாக இருந்து வருகிறார் அதனால் இவர்கள் இருவரும் தங்கள் ப்ராஜெக்ட்டுகளை முடித்த பிறகு நிச்சயம் யாருமே யோசிக்காத அளவிற்கு ஒரு மிகப்பெரிய கூட்டணி உருவாகுவது மட்டுமில்லாமல் அசைக்க முடியாத ஒரு திரைப்படமும் உருவாகும் என சந்தேகமில்லாமல் தெரிகிறது.

Leave a Comment