கமல் எவ்வளவோ சொல்லியும் கேட்காத நடிகை.! 30 வருடமாக ஒதுக்கி வைத்த சோகம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் அரசியல்வாதி தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கி வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் 80 காலகட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபல நடிகை ஒருவரை திட்டி இருக்கிறார்.

இதனால் கோபமடைந்து அந்த நடிகை தற்போது வரை கமல்ஹாசனுடன் ஜோடி சேராமல் இருக்கிறார் அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் படம் என்றாலே அவர் வெறுத்து ஒதுக்கிராராம்.

அதாவது 1986 ஆம் ஆண்டு மற்றும் 1987 ஆம் ஆண்டு இந்த இரண்டு ஆண்டிலும் கமல்ஹாசன் உடன் இரண்டு படத்தில் ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதிகா. அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளியான சிப்பிக்குள் முத்து மற்றும் பேர் செல்லும் பிள்ளை ஆகிய இரண்டு திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து உள்ளனர்.

ஆனால் இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் உடன் எந்த ஒரு திரைப்படத்திலும் ராதிகா அவர்கள் ஜோடி சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ராதிகா பேட்டி ஒன்றில் கமல்ஹாசனை பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார்.

அதாவது ஒரு முறை கமல்ஹாசன் உடன் நடித்துக் கொண்டிருக்கும் போது கதைக்கு தேவைப்படும் இடத்தில் என்னை மயங்கி விழ சொன்னார் ஆனால் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

அதன் பிறகு மற்றொரு நாள் படப்பிடிப்பின் போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டேன் இதை பார்த்த கமலஹாசன் சனியன் நான் சொல்லும் போது மயக்கம் போட்டு விழாது நேரம் கெட்ட நேரத்தில் தான் விழுது பாரு என்று ராதிகாவை திட்டி இருக்கிறாராம். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் நடிகை ராதிகா கமல்ஹாசன் உடன் ஜோடி சேரவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Comment