தன்னுடைய மரணத்திற்காக முன் கூட்டியே சமாதி கட்டிகொண்டு காத்திருக்கும் கமல் பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை ரேகா இவர் 1986 ஆம் ஆண்டு கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படத்தில் நடித்து வந்தார் நடிகை ரேகா.

இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவு சொல்லும் அளவிற்கு வரவேற்ப்பை பெறவில்லை என்றாலும் இவர் தமிழையும் தாண்டி கன்னடம், தெலுங்கு, மலையாளம், போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை ரேகா கமலுடன் ஒரே ஒரு திரைப்படத்தில்தான் சேர்ந்து நடித்தார் அந்த திரைப்படம் இவரை மிகப்பெரிய இடத்தில் கொண்டு சேர்த்தது.

அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவே நடிகை ரேகாவின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்டது அந்த அளவிற்கு இந்த படம் வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் நடிகை ரேகா அவர்களின் வயது அதிகரித்ததால் கதாநாயகிக்கான அந்தஸ்தை இழந்து தற்போது துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரேகா அவர்கள் தனக்காக ஒரு கல்லறை கட்டி வைத்துக்கொண்டு காத்திருப்பதாக சில தகவல் வெளியாகி இருக்கிறது  இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

அதாவது நடிகை ரேகா அவர்கள் தனது தந்தையின் கல்லறை பக்கத்திலேயே தனக்கு ஒரு கல்லறையை கட்டி வைத்து அதை பராமரித்து வருகிறாராம். இந்த செய்தி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சிலர் இதிலிருந்தே தெரிகிறது நடிகை ரேகா தனது தந்தையின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று என கூறி வருகிறார்கள்.

Leave a Comment