கமலஹாசன் அந்த படத்தை பார்த்து விட்டு அரைமணி நேரம் கண்ணீர் விட்டு அழுதார் – இயக்குனர் பிரபு சாலமன் பேட்டி.

வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் இயக்குனர் பிரபு சாலமன் இவர் மைனா, கயல், கும்கி போன்ற வெற்றி படங்களை  இயக்கியவர்.  தற்போது கூட செம்பி என்ற படத்தை எடுத்து  வருகிறார் இந்த படத்தில் கோவை சரளா, அஸ்வின் போன்ற முக்கிய  படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இருக்கின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் பிரபு சாலமன்  செம்பி மற்றும் திரையுலக நண்பர்கள் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அவர் சொல்லி உள்ளது. குறிப்பாக உலக நாயகன் கமலஹாசனை பற்றி பேசினார்.

கிரணை வைத்து கொக்கி என்னும் திரைப்படத்தை இயக்கினேன். கரணும், கமலும் நெருங்கிய நண்பர்கள். அதனால் அந்த படத்தின் ஆடியோ பங்ஷனுக்கு அழைத்திருந்தேன். அப்பொழுது நான் கமலுடன் மட்டும்தான் கை குலுக்கினேன் மேலும் அவருடன் அறிமுகம் அப்பொழுது பெரிதளவு கிடையாது.

பின் மைனா படத்தின் ஆடியோ லான்ச்க்கு அழைத்து இருந்தேன் அவரோ படத்தை பார்த்துவிட்டு தான் வருவேன் என கூறினார். படத்தை பார்ப்பதற்கான வேலைகளை செய்தேன். படத்தைப் பார்த்துவிட்டு  கண்கலங்கிய வெளியே வந்தார்.பின் அரை மணி நேரம் என்னை சந்தித்து பேசினார்.

பின் கமல் மைனா படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் படத்தை பார்த்துவிட்டு  நன்றாக தூங்கினேன் என கூறினார்.  உதயநிதி படத்தைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் நான் தூங்கவே இல்லை என கூறினார்.

அதிலிருந்து கமல் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவது வழக்கம் மேலும் அவரை வைத்து ஒருபடம் பண்ண இருந்தது சில கமர்சியல் காரணங்களாக அப்போது அது நடக்க முடியாமல் போனது வெகு விரைவிலேயே கமலை வைத்து ஒரு படம் பண்ணுவேன் என கூறினார்.

Leave a Comment