சோடா புட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு கல்யாணி பிரியதர்ஷன் காலேஜ் படிக்கும் பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

அடியாத்தி இது கல்யாணி பிரியதர்ஷனா என ஆச்சரியப்படும் அளவிற்கு அவரின்  கல்லூரி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவர் தற்பொழுது மிகவும் பிசியாக நடித்து வருகிறார் இந்த நிலையில் கல்யாணி  பிரியதர்ஷன் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தமிழை தாண்டி மற்ற மொழி திரைப்படங்களிலும் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

தமிழில் முதன் முதலாக ஹீரோ என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து புத்தம் புது காலை, மாநாடு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்பதால் மலையாள பக்கம் தனது பார்வையை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது மலையாளத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பல நடிகைகள் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு தனது பக்கம்  ரசிகர்களை தக்கவைத்துக் கொள்வார்கள் அந்த வகையில் கல்யாணி பிரியதர்ஷன் அடிக்கடி இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவார் அது மட்டும் இல்லாமல் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டவர் ஆனால் இந்த முறை கல்லூரி படிக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நம்ம கல்யாணி பிரியதர்ஷனா இப்படி இருப்பது என ஆச்சரியம் அடைந்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version