காஜல் அகர்வால் விரைவிலேயே குழந்தை பெற்று கொள்ளவேண்டும் – காஜல் அகர்வால் தங்கை அதிரடி.! காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்.

பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் காஜல்அகர்வால் அதன் பிறகு குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்து வந்தாலும் அந்த திரைப்படங்கள் சொல்லும்படி வெற்றியை பெறாததால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் தெரியாமல் போனார்.

ஆனால் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் இந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதன் பின்னர் இவருக்கு தென்னிந்திய சினிமா முழுவதும் உள்ள டாப் நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாக நடித்ததால் தற்போது தென்னிந்திய சினிமாவில் கவனிக்க கூடிய ஒரு நடிகைகளில் இவர் மாறியுள்ளார்.

மேலும் இவரது படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையும் நடத்தியதால் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார். இப்படி சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த காஜல்அகர்வால் திடீரென தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கிச்சலுகை திருமணம் செய்துகொண்டு தற்பொழுது வாழ்க்கையை என்ஜாய் செய்து வாழ்ந்து வருகிறார்.

சினிமா நேரம் போக தனது கணவரை விட்டுப் பிரியாமல் இருந்து வரும் காஜல் அகர்வால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியது.

காஜல் அகர்வால் சில சுயநலமான காரணங்களுக்காக அவர் சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன் அவருக்கு திருமணம் ஆன நாளில் இருந்தே நான் இதை சொல்லி கொண்டே இருக்கிறேன் அவர் தாமதித்தால் என் மகனுக்கு துணை கிடைக்காமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்.

காஜல் அகர்வாலின் பிறந்தநாள் அதுவும் இவர் கூறிய செய்தி தற்போது இணையதளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version