பல வருடம் கழித்து முதல் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காதல் சந்தியா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை சந்தியா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் தமிழில் முதன்முதலாக 2004 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியாகிய காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், சந்தியா சினிமாவிற்கு அறிமுகமான திரைப்படமும் காதல் தான். இந்த திரைப்படத்தில் பெஸ்ட் நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

காதல் சந்தியா தமிழில் அதன்பிறகு டிஷ்யூம், வல்லவன், கூடல்நகர், கண்ணாமூச்சி ஏனடா, தூண்டில், வெள்ளித்திரை, மகேஷ் சரண்யா மற்றும் பலர், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், கடைசியாக இவர் கத்துக்குட்டி, வெரி திமிரு 2 என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் அதன் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு எங்கு போனார் என்றே தெரியவில்லை.

2015ம் ஆண்டு இவர் வெங்கட் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்குப் பிறகு இவர் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை, அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்திலும் இவரை காண முடியவில்லை. ஆனால் இவருக்கு அதிக மன அழுத்தம் இருந்ததால் அதனால் இவர் அவதிப்பட்டு வந்ததாகவும் தகவல் கிடைத்தன.

சந்தியா வெங்கட் தம்பதிக்கு 2016ஆம் ஆண்டு ஷீமா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்பொழுது சந்தியா படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு குடும்பத்தை கவனித்து வருகிறார், இந்த நிலையில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் இதை பார்த்த ரசிகர்களுக்கு சந்தியா தான என வாயடைத்துப் போனார்கள்.

kadhal-sandya
kadhal-sandya

இந்த நிலையில் குழந்தையுடன் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை முதன்முறையாக தற்போது வெளியிட்டுள்ளார் காதல் சந்தியா. திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட சந்தியா இன்னும் அப்படியே தான் இருக்கிறாரா என புகைப்படத்தை பார்த்து கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

kadhal-sandya -tamil360newz
kadhal-sandya -tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment