வெட்டுக்கிளி தாக்குதலுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளபட்ட காப்பான் படக்குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா இவர் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருபவர். அந்த வகையில் இவர் 2011ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் சீனாவில் இருந்து ஒருவர் ஒரு கெட்ட வைரஸை எடுத்துவந்து பிற நாடுகளை அழிக்க நினைப்பார் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

அது தற்பொழுது உண்மையாகவே ஆகவே சீனாவிலிருந்து கொரோனா வைரஸ்  மற்ற நாடுகளை தற்போது வரை அச்சுறுத்தி வருகிறது இதனால் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இவர் சமீபத்தில் நடித்த காப்பான் திரைப்படத்தில் வெட்டுக்கிளிகள் பயிரை நசப்படுதுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன அதேபோல தற்போதும் உண்மையாகவே ராஜஸ்தானில் விளைநிலங்களை தாக்கிவிட்டு தற்போது கன்னடம்  போன்ற பகுதிகளில் தனது தாக்கத்தை காட்டிவருகிறது வெட்டுக்கிளி.

சூர்யா நடித்த படங்களில் காட்சிகள் எல்லாம் தற்பொழுது நிஜமாகவே நடப்பதால் சோசியல் மீடியாக்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் காப்பன் படத்தை இயக்கிய கே வி ஆனந்த் அவர்கள் பேட்டி ஒன்றில் இதற்கு விளக்கமளித்துள்ளார். நான் இயக்கும் படங்கள் பெரும்பாலும் புதிதாக அல்லது எந்த ஒரு கதையையோ உருவாக்குவது இல்லை செய்தித்தாள்கள் மற்றும் ஏற்கனவே இருந்த விஷயத்தை தான் நான் படமாக்கி கொண்டிருக்கிறேன்.

memes
memes

அந்த வகையில் மாற்றான் படத்தின் ஷூட்டிங்கின் போது மடகாஸ்கரில்  வெட்டிக்கிளி பயிரை நாசம் பன்னுவதைநான் நேரிலேயே பார்த்தேன் அப்போது காரை ஓட்டிவரிடம் இதைபற்றி  கேட்கும் பொழுது இதுபோன்ற வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா போன்றவற்றில் அடிக்கடி படையெடுக்கும் கூறினார் இதைபற்றி நான் அதனை முழுமையாக படிக்க ஆரம்பித்தேன். இதைத் தொடர்ந்து தான் நான் காப்பான் படத்தையும் எடுத்து என் எனவும் கூறினார் அது மட்டும் இல்லாமல் இந்த வெட்டுக்கிளிகள் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு விரியம் இருக்கும் என்றும் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்யும் பலவகையான பூச்சிகள் இருப்பதாகவும் படித்தேன் அதில் ஒன்றுதான் சிலிபெரா என்னும் வகைதான் காப்பான் படத்தில் வைத்தேன் என கூறினார்.

memes
memes

அதுமட்டுமில்லாமல் மேலும் அவர் இது போன்று இந்தியாவில் ஆயிரத்து 1903 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் மும்பையில் வெட்டுக்கிளிகள் பயிரை சேதப்படுத்தி உள்ளன பல ஆண்டுகள் கழித்து தற்போது இதுபோன்ற தாக்குதல் ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார் இதுவரையிலும் தமிழ் நாட்டில்  தற்போது  வரையிலும் தமிழ் நாட்டில் இதுபோன்ற வெட்டுக்கிளிகளின் தாக்குதல் நடந்தது இல்லை எனவும் கூறியிருந்தார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment