கே ஜி எஃப் பட நடிகரின் காலை தொட்டு வணங்குகிறேன்.! சினிமா பிரபலம் மேடையிலேயே அதிரடி பேச்சு.!

பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் ஒரு பேட்டியில் கேஜிஎப் பட நடிகர் யாஷ் காலில் விழுந்து நான் வணங்குகிறேன் என்று அதிரடியாக பேசியிருக்கிறார். யாஷ் அவர்கள்  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பிரசாந்த் நில் இயக்கத்தில் உருவான கேஜிஎப் 1 மற்றும் கே ஜி எஃப் 2 இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழிலும் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்  என்பது குறிப்பிடப்பட்டது இந்த நிலையில் நடிகர் யாஷ் அவர்களின் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என பகிரகமாக பேசிய தயாரிப்பாளரின் பேச்சு தான் தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் தான் நடிக்கும் படங்களிலிருந்து 70% சம்பளமாக பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை கூட அவர்கள் எண்ணவில்லை. ஆனால் நடிகர் யாஷ் அவர்களிடம் கே ஜி எஃப் பட தயாரிப்பாளர் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு யாஷ் என்னுடைய சம்பளத்தையும் படத்தில் போட்டு பிரமாண்டமாக படத்தை எடுங்கள்  இந்த படம் முடிந்து வெளியாகி வெற்றி பெற்றால் அதில் மீதமுள்ள கமிஷனில் எனக்கு எவ்வளவு சம்பளமோ அதை மட்டும் கொடுங்கள் என கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எனக்கு தற்போது சம்பளமாக கொடுக்க வேண்டிய பணத்தை  நீங்கள் இந்த படத்திற்காக செலவு செய்யுங்கள் படம் வெற்றி பெற்ற பிறகு என்னுடைய சம்பளத்தை பற்றி பேசுவோம் என அவர் கூறியுள்ளதாக தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கூறியிருக்கிறார்.

இது போன்ற நடிகர்கள் யாரும் தயாரிப்பாளர்கள் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறார்கள் அதற்கான வட்டி எவ்வளவு கட்டுகிறார்கள் என்று எதையும் எண்ணாமல் படத்தின் முக்கால்வாசி அளவிற்கு சம்பளத்தை பெற்று விடுகிறார்கள் என்று கூறியது மட்டுமல்லாமல் யாஷின் காலில் விழுந்து நான் வணங்க விரும்புகிறேன் எனவும் கூறியிருக்கிறார்.

Leave a Comment